Advertisment

புத்தாண்டு தினத்தில் சோகம்: புதுச்சேரியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஐ.டி ஊழியர் மரணம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடத்தின்போது கடலில் குளித்த ஐ.டி ஊழியரை இழுத்துச் சென்ற ராட்சத அலை; உடல் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது

author-image
WebDesk
New Update
புத்தாண்டு தினத்தில் சோகம்: புதுச்சேரியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஐ.டி ஊழியர் மரணம்

பாண்டிச்சேரி கடற்கரை

புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் நண்பர்களுடன் குளிக்கும் பொழுது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உடல் இன்று (ஜனவரி 1) காலை கரை ஒதுங்கியது.

Advertisment

இதையும் படியுங்கள்: புத்தாண்டு: நடுரோட்டில் விபரீத சாகசம்

publive-image

பாண்டிச்சேரி கடற்கரை

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் தீபக் வயது 22. பெங்களூரில் தனியார் ஐ.டி கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். புத்தாண்டு கொண்டாடுவதற்காக நண்பர்கள் ஆறு பேருடன் புதுச்சேரி வந்தவர்கள் அங்கு அறை எடுத்து தங்கினார். மேலும் கடலில் குளிக்க ஆசைப்பட்டு தீபக் உள்ளிட்ட ஏழு பேரும் கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் அருகே உள்ள சூர்யா பீச்சில் குளித்தனர்.

publive-image

பாண்டிச்சேரி கடற்கரை

அப்போது ராட்சத அலை தீபக்கை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைப் பார்த்து அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. இந்த நிலையில் ஐ.டி ஊழியரின் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது. இதுகுறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Pondicherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment