Advertisment

தூத்துக்குடிக்கு நாளை முதல் ரயில் சேவை: தென்னக ரயில்வே

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நாளை முதல் ரயில் சேவை வழங்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. எனினும் திருச்செந்தூர் ரயில் சேவை..

author-image
WebDesk
New Update
irctc

திருச்செந்தூரில் ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

southern-railway | tuticorin | குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்தது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்  பெரும் சேதங்கள் ஏற்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஜங்ஷன், டவுண், சிந்துபூந்துரை, களக்காடு, கூடங்குளம், செட்டிக்குளம் மற்றும் தாமிரபரணி கரையோரம் இருந்த கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சென்னைக்கு சென்ற ரயில் 800 பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.

அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் சேதம் அடைந்தன.

இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட திருச்செந்தூரில் ஒரு வாரத்துக்கு பின்னர் ரயில் சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Southern Railway Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment