தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன். இவர் மதுரை சென்டிரல் தொகுதியில் கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட பணிகள் தொடர்பான தொகுதி வளர்ச்சியை அறிக்கையை செப்.10ஆம் தேதி வெளியிட்டார்.
இந்த அறிக்கை 15 பக்கங்கள் கொண்டிருந்தது. அதில் 2023 மே மாதம் வரை நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து, மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு வளர்ச்சி பணிகள் குறித்த அறிக்கை வழங்கப்பட்டது.
இது மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. பி.டி.ஆர். முன்பு நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆடியோக்கள் வெளியாகின. தொடர்ந்து, சில நாள்களில் அவர் ஐ.டி துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“