/tamil-ie/media/media_files/uploads/2017/11/vivek-house.jpg)
சென்னை மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள இளவரசியின் மகன் விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இன்று சுமார் 50 இடங்களில் 3-வது நாளாகவும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் தியேட்டர், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களிலும், சசிகலாவின் உறவினர்கள் விவேக், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரது வீடுகளிலும் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமாக சென்னை மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயா டிவி, நமது எம்.ஜி,ஆர். ஜாஸ் சினிமாஸ் ஆகிய 3 நிறுவனங்களையும் நிர்வகித்து வருபவர் விவேக். அதனால், அந்நிறுவனங்களின் ஆண்டு வருமானம், வருமான வரி தாக்கல் குறித்த சந்தேகங்களை விவேக் மட்டுமே தீர்க்க முடியும் என்பதால், அவருடைய வீட்டில் தொடர் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.