/tamil-ie/media/media_files/uploads/2019/10/kalki.jpg)
chennai, kalki bhagwan, ashram, It raid, Tax evasion,tamil nadu,search,income tax, கல்கி பகவான், ஆசிரமம், வருமானவரித்துறை, சோதனை, வரி ஏய்ப்பு
தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி பகவான் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத, 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள, வரதய்ய பாளையத்தில், கல்கி பகவான் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள், தமிழகம், ஆந்திராவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ளன.
வரி ஏய்ப்பு : கல்கி பகவானை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்திற்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை என, கல்கி ஆசிரமத்தின் மீது, வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.
அதையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி ஆசிரமம் மற்றும் பகவானின் மகன், என்.கே.வி.கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய, ஹோட்டல்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், சோதனையில் ஈடுபட்டனர்.சென்னையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம்,நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரமம் உட்பட, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில், 40 குழுக்களாக, 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஆந்திராவில், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில், 40 குழுக்கள் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரில், இந்த சோதனை நடந்தது. சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.