/tamil-ie/media/media_files/uploads/2022/10/Trafic.jpg)
க. சண்முக வடிவேல்
திருச்சி மாவட்ட போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட போக்குவரத்து துறையில் துணை போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வருபவர் அழகரசு. திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த இவர், தற்போது பதவி உயர் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி வந்துள்ளார்.
இதில் கடந்த ஒரு வருடமாக திருச்சி பிராட்டியூரில் உள்ள மாவட்ட மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராகத்தில் பொறுப்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருகிறார். மேலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அகிலா மேன்சனில் வசித்து வருகிறார்
இந்நிலையில் அழகரசு திருவண்ணாமலையில் பணியாற்றிய காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இவரது வீட்டில் இன்று காலை முதல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.