பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தங்கள் அமைப்பின் சார்பாகச் சந்தித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ளது.
சமீபத்தில், கடந்த ஜூன் 13 அன்று, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு, ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்ததாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால், இந்தத் தகவலை ஜாக்டோ-ஜியோ அமைப்பு மறுத்துள்ளது. ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜாக்டோ-ஜியோ எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை வென்றுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/15/jHpnINoWCYXrD99jHDKE.jpg)
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவிற்காகக் காத்துள்ளோம். இந்தச் சூழலில், நாங்கள் ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைச் சந்தித்துப் பேசவில்லை. எனவே, அதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.