ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (24.03.2025) தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்திற்கு ஏப்ரல் 23 வரை தடை நீட்டித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த இடைக்கால தடை விதித்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, ஜாக்டோ-ஜியோ சார்பில் முன்வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, அதுவரை போராட்டம் நடத்த தடையை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.