Advertisment

எதிர்க்கட்சி தலைவராக ஆதரித்த ஸ்டாலின்… ஆட்சிக்கு வந்த பிறகு கைவிட்டுவிட்டார் - ஜாக்டோ ஜியோ

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, கைவிட்டுவிட்டதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Jactto - Geo, Jactto - Geo announces protest against Minister PTR Palanivel Thiagarajan, அமைச்சர் பி.டி.ஆர் போக்கு சரியில்லை, ஜாக்டோ- ஜியோ போராட்டம் அறிவிப்பு, திமுக, Minister PTR Palanivel Thiagarajan, DMK, Tamilnadu

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, கைவிட்டுவிட்டதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க அளித்த வாக்குறுதகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்ற மறுத்தால், வரும் தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் தி.மு.க-வை கைவிடுவார்கள் என்று கூறினார்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கனகராஜ் பேசுகையில், “அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முந்தைய அ.தி.மு.க அரசால் பறிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை கைவிட்டுவிட்டார். கடந்த ஆட்சியில் நாங்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியபோது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளைக் கூட செவிசாய்க்கவில்லை என்று ஸ்டாலின் எங்களிடம் கூறினார். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று உறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இப்போது, அவர் தனது அரசாங்கம் அளித்த வாக்குறுதியையும் சமூக நீதியையும் மறந்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சி 2013-ல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தியபோது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தாலும், தவறை உணர்ந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு புத்துயிர் அளித்தது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என்பதால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் குப்பையில் போட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

காலவரையின்றி முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் விடுப்பு சரண்டர் செய்தல் முறையை தாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அகவிலைப்படி உயர்வு குறித்த சமீபத்திய அறிவிப்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை கைவிடப்பட்டதால், அதையும் சேர்க்க வேண்டும். முதுகலை மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்.இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment