ஜாபர் சாதிக் தொடர்பான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப் பொருள் கைப்பற்றப்பட்டது.இவர்களிடம் விசாரித்தபோது, இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக்தான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டால் இவர், தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மார்ச் 9ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மார்ச் 9ம் தேதி ஜாபர் சாதிக் வீடு மற்றும் அவருடைய சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் தற்போது ஜாபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.