/indian-express-tamil/media/media_files/K4oXjkqj9pppKDanZnTA.jpg)
ஜாபர் சாதிக் தொடர்பான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப் பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மார்ச் 9ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.