செந்தில் பாலாஜிக்கு 2-வது நாளாக இன்றும் மருத்துவ பரிசோதனை: பித்தப் பையில் கற்கள் கண்டுபிடிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 ஆவது நாளாக எம்.ஆர்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்றைய பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 ஆவது நாளாக எம்.ஆர்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்றைய பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Jailed TN minister Senthil Balaji hospitalised and undergoes tests for second day Tamil News

2வது பரிசோதனையிலும் பிரச்சினைகள் கண்டறியப்படும் பட்சத்தில் சிகிச்சை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குதொடர்ந்து வழங்கப்படும் என மருத்துவ குழு தெரிவித்துள்ளனர்.

v-senthil-balaji: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவமனையில் அனுமதி 

Advertisment

இந்நிலையில், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனை

மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 2-வது நாளாக  பரிசோதனை

Advertisment
Advertisements

இந்த நிலையில், 2-வது நாளாக இன்று செந்தில்பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. இன்றைய பரிசோதனையில் அவருக்கு கடும் தலைவலி, கால் மரத்துப் போதல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் இந்த பரிசோதனை எனவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

V Senthil Balaji

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: