சீனா, பாகிஸ்தானுக்கு அளித்த பதிலடி… இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது: ஜெய்சங்கர்

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
India national security, இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது, ஜெய்சங்கர், S Jaishankar, Indian express news

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார்.

Advertisment

எல்லைப் பிரச்சினைகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்று காட்டியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார். இந்தியாவின் நீண்டகால பொறுமையான அணுகுமுறை பயங்கரவாதத்தை இயல்பாக்குவதற்கான ஆபத்தை உருவாக்கியது. ஆனால், விமானப்படை நடத்திய பாலகோடு வான்வழித் தாக்குதல் மிகவும் தேவையான செய்தியை அனுப்பியது என்றும் அவர் கூறினார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019-ம் ஆண்டு பயங்கரவாத முகாம் மீது பாலகோடு வான்வழித் தாக்குதலின் போது இந்தியா முதன்முறையாக விமானப் படையைப் பயன்படுத்தியது.

“நம்முடைய நீண்ட கால பொறுமையான அணுகுமுறை பயங்கரவாதத்தை இயல்பாக்குவதற்கான ஆபத்தை உருவாக்கியது. அதனால்தான், உரி மற்றும் பாலகோடு நடவடிக்கைகள் மிகவும் தேவையான செய்தியை அனுப்பியது. வடக்கு எல்லைகளில், பெரிய படைகளைக் கொண்டுவந்து, நமது ஒப்பந்தங்களை மீறியதன் மூலம், தற்போது உள்ள நிலையை மாற்ற சீனா இன்று முயன்று வருகிறது. கோவிட் இருந்தபோதிலும், இது மே 2020-ல் நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய எதிர் பதிலடி வலுவாகவும் உறுதியாகவும் இருந்தது” என்று ஜெய்சங்கர் கூறினார்.

Advertisment
Advertisements

எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்கள் தீவிரமான நிலப்பகுதிகளிலும் மோசமான வானிலையிலும் எல்லைகளை பாதுகாக்கும் என்று ஜெய்சங்கர் கூறினார்.

“ஆயிரக்கணக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த துருப்புக்கள் மிக தீவிரமான நிலப்பரப்பு மற்றும் கடுமையான வானிலையில் நமது எல்லைகளை பாதுகாக்கின்றன. அது இன்றுவரை தொடர்கிறது. எனவே, இந்தியா விவகாரம் முக்கியமானது. இது அச்சுறுத்த முடியாத ஒரு நாடு என்று உலகம் பார்க்கிறது. இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது. இந்தியா அதன் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையானதைச் செய்யும்” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

கவனமான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மூலம் முழு அளவிலான தொடர்புகள் மற்றும் வலுவான பொருளாதார இணைப்புகளை உருவாக்க மத்திய அரசு செயல்பட்டு வருவதாக ஜெய்சங்கர் கூறினார்.

1947-ல் பிரிவினை நடைபெறாமல் இருந்திருந்தால், இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக இருந்திருக்கும், சீனா அல்ல. பிரிவினை பல பிராந்தியங்களை துண்டித்து நாட்டின் அந்தஸ்தைக் குறைத்துள்ளது என்று ஜெய்சங்கர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai S Jaishankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: