7 மணி நேரம்; பூதக் கண்ணாடியில் சூரிய ஒளி கொண்டு ஜல்லிக்கட்டு ஓவியம்: கோவை கலைஞர் அசத்தல்

ஜல்லிக்கட்டு காளையும், மாடு பிடி வீரரும் அந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளனர். தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்

ஜல்லிக்கட்டு காளையும், மாடு பிடி வீரரும் அந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளனர். தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Jalli.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

Advertisment

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பொங்கல் விழாவை மாணவர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சையாக  நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில் ஜல்லிகட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி. ராஜா பூதக் கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார்.  

Advertisment
Advertisements

இதில் ஜல்லிக்கட்டு காளையும், மாடு பிடி வீரரும் இடம்பெற்றுள்ளனர்.  இதற்காக 7 மணி நேரம் எடுத்து கொண்ட இவர் தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: