/indian-express-tamil/media/media_files/2025/08/29/jallikattu-covai-2025-08-29-00-03-52.jpg)
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வியாழக்கிழமை திறந்து வைத்தனர்.
கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் அதிஷ்யா டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/29/jallikattu-3-2025-08-29-00-05-12.jpeg)
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/29/jallikattu-6-2025-08-29-00-06-17.jpeg)
கோவையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி வருவதாகவும் தொடர்ந்து பங்காற்றுவோம் என்றும் தெரிவித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் இது போன்ற முன்னெடுப்புகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அதிஷ்யா நிர்வாக இயக்குனர் மணிகண்டன் உட்பட அந்நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.