Advertisment

ஜன.15 ஆம் தேதி இறைச்சி விற்க தடை...மதுரை ஆணையர் உத்தரவு

ஜனவரி 15 ஆம் தேதி இறைச்சி விற்க தடை விதித்து மதுரை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
மதுரை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதி மதுரையில் இறைச்சி விற்க அம்மாவட்ட ஆணையர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

மதுரை மாநகராட்சி ஆணை யர் தினேஷ்குமார் கூறியதாவது, மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜன. 15-ம் தேதி (புதன்கிழமை) அன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாளில் ஆடு. மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment