Advertisment

ஜெயலலிதா ஃபைல்களை திருடிச் சென்றார் ஓ.பி.எஸ்; டி. ஜெயக்குமார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஃபைல்களை ஓ.பன்னீர் செல்வம் திருடிச் சென்றார் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK Jayakumar on alliance with BJP and Annamalai

ஜெயலலிதா ஃபைல்களை திருடிச் சென்றார் ஓ.பி.எஸ் என டி. ஜெயக்குமார் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சநதித்தார். அப்போது அவர், “அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகத்தின் சின்னம், கொடி, இலச்சினை உள்ளிட்ட எதையும் ஓ பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

என்னை பொருத்தவரை ஓ பன்னீர் செல்வம் ஒரு நம்பிக்கை துரோகி. அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் அறைகளை திறந்து மன்னிக்க முடியாத சில தவறுகளை செய்தார்.

அங்கிருக்கும் ஃபைல்களை திருடிச் சென்றார். இந்த நிலையில் தான் அவர் நீதிமன்றத்தை நாடினார். தற்போது தெளிவான பதில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒற்றுமை உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதி எங்கள் பக்கம் இருக்கிறது இதைதான் நீதிமன்றம் நிலைநாட்டி உள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

D Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment