Advertisment

ஒருபுறம் அண்ணாமலை- ஜெயக்குமார் யுத்தம்; மறுபுறம் அதிக சீட் பேரம்: அ.தி.மு.க பா.ஜ.க இடையே என்ன பிரச்னை?

அமித் ஷா பா.ஜ.க-வுக்கு 15 இடங்கள் வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AIADMK Jayakumar  | PM MODI

தமிழக பா.ஜ.க தலைவரான கே.அண்ணாமலை, முன்னாள் முதல்வர்களான ஜெ.ஜெயலலிதா மற்றும் சி.என்.அண்ணாதுரை போன்ற அ.தி.மு.க தலைவர்களை தாக்கி பேசி இருந்தார்.

D-Jayakumar | Annamalai | Tamilnadu-bjp | Aiadmk: சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க-வின்  முன்னாள் அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான ஜெயக்குமார், அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இல்லை என்றும், தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Advertisment

இருப்பினும், இரு கட்சிகளும் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி அமைப்பது போலவே, தமிழகத்திலும் ஒரு வலுவான பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித் ஷா, கடந்த வாரம் அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை டெல்லியில் சந்தித்தபோது, ​​பா.ஜ.க. 2024 மக்களவை  தேர்தலில் அதிக இடங்களை பெற விரும்புவதாக கூறப்பட்டது. அதாவது, பா.ஜ.க-வுக்கு 15 இடங்கள் வேண்டும் என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. முந்தைய தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கட்டப்பட்டது. அதை விட மூன்று மடங்கு கூடுதலாக தற்போது கேட்கிறது. 

சமீபத்தில், தமிழக பா.ஜ.க தலைவரான கே.அண்ணாமலை, முன்னாள் முதல்வர்களான ஜெ.ஜெயலலிதா மற்றும் சி.என்.அண்ணாதுரை போன்ற அ.தி.மு.க தலைவர்களை தாக்கி பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமாரின் கருத்துக்கள் இருந்தன. “ஜெயலலிதாவை விமர்சித்து தொண்டர்களின் கோபத்திற்கு ஆளான பிறகு, அவர் தனது கருத்தை மறுத்துவிட்டார். தற்போது மீண்டும் அண்ணாவை தாக்கி பேசியுள்ளார்." என்று ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். 

1956 ஆம் ஆண்டு அண்ணாதுரை இந்து மத நம்பிக்கையை விமர்சித்து ஆற்றிய உரையை குறிப்பிட்டு, செல்வாக்கு மிக்க சுதந்திரப் போராட்ட தலைவர் முத்துராமலிங்க தேவர் அண்ணாதுரையின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக அண்ணாமலை கூறியிருந்தார். பழனிசாமி உட்பட பல தலைவர்கள் கடந்த காலத்தை தோண்டி எடுப்பது புத்திசாலித்தனம் என்று கேள்வி எழுப்பிய நிலையில், அ.தி.மு.க கடுமையாக பதிலடி கொடுத்தது. 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை சொந்த வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தும் பூச்சிக்கு ஒப்பிட்டார். “சுயமரியாதை உள்ள எந்த அ.தி.மு.க.வினரும் அதை ஏற்க மாட்டார்கள்,” என்று கூறிய அவர், அண்ணாமலையின் வார்த்தைகள் கூட்டணி அரசியலுக்கு உதவாது என்று கூறினார். 

மேலும் பேசிய ஜெயக்குமார், “இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அண்ணாமலையை அ.தி.மு.க தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள். அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க உடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். எங்களை விமர்சிக்கும் பா.ஜ.கவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்கு வாங்குவார்" என்று விமர்சித்தார்.

இந்நிலையில், அறிஞர் அண்ணாவுக்கு எதிரான கருத்துகளை அ.தி.மு.க எதிர்க்காமல் விட முடியாது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து திராவிட இயக்கத்தை இழந்துவிட்டதாக கட்சி ஏற்கனவே கருதப்படும் போது,  குறிப்பாக அந்த இடத்தை தி.மு.க ஆக்ரோஷமாக கோரும் போது, அ.தி.மு.க-வினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபுறம், தமிழக அரசியலில் முக்கியமில்லாத காரணியாக இருக்கும் பா.ஜ.க-வின் நிலைப்பாட்டால் துவண்டு போகாத ஆக்ரோஷமான தலைவராக அண்ணாமலையும் வலம் வருகிறார்.  திரைக்குப் பின்னால், அ.தி.மு.க.விடம் இருந்து அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், தமிழகத்தில் பா.ஜ.க விரும்பும் 15 தொகுதிகளில், 10ல் தனித்து போட்டியிடவும், 5 இடங்களை அதன் சிறிய உள்ளூர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைவர்கள், தங்களின் கால்தடத்தைப் பரப்புவதற்கான அவர்களின் திட்டம் உடனடி மக்களவைத் தேர்தலுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. 2026-க்குள் 90 சட்டமன்றத் தொகுதிகளை எட்டும் என்று மூத்த தலைவர் ஒருவர் பேசினார். இருப்பினும், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டுவதால், அது அக்கட்சிக்கு சாதகமாக இருக்காது.

ஆங்கிலத்தில் படிக்க:- Behind Tamil Nadu tough talk, tough bargain, as BJP pushes for more Lok Sabha seats from ADMK

நீக்கப்பட்ட அ.தி.மு.க தலைவர்களான டி.டி.வி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் மீதான தனது நிலைப்பாட்டை மென்மையாக்க எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க தூண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் அ.தி.மு.க ஆதரவில் இருந்து விலகியதால் தி.மு.கவுக்கு எதிரான கூட்டணி வலுவிழந்துவிடும் என்ற அச்சத்தில் பா.ஜ.க உள்ளது.

சிக்கலான சாதி சமன்பாடுகளின் விளைவாக, தென் தமிழகத்தில் பா.ஜ.க-வின் பேரம் பேசும் சக்தியை இது பலப்படுத்தும் என்று அஞ்சுவதால், அ.தி.மு.க இதைப் பற்றி ஆர்வம் காட்டவில்லை.

அ.தி.மு.க-வுக்கு தேவர்கள் எனப்படும் முக்குலத்தோர் சமூகத்தினர் பாரம்பரியமாக வாக்கு வங்கியாக இருந்து வருகின்றனர். ஆனால், 2019 தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவு நிலையில் எடுத்தனர். தற்போது அவர்களின் வாக்குகளை வசப்படுத்த  பா.ஜ.க. ஆர்வம் காட்டுகிறது. மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான விகே சசிகலா, கிளர்ச்சித் தலைவர்களான தினகரன், பன்னீர்செல்வம் என அனைவரும் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவார். இந்த சமூகத்தினர் அதிகம் இருக்கும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில், அ.தி.மு.க-வின் கிளர்ச்சியாளர்களான சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் திரும்புவது அவர்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் வலு சேர்க்கும்.

பா.ஜ.க-வின் கைகளில் உள்ள மற்றொரு துருப்புச் சீட்டு, அ.தி.மு.க-வின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிரான பல வழக்குகள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் முன் நிலுவையில் உள்ளது. அ.தி.மு.க தலைவர்கள் பா.ஜ.க-வுக்கு அதிக இடத்தை விட்டுக்கொடுப்பது குறித்து அச்சத்தில் இருக்கும்போது, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பு ஒரு தேசிய கட்சிக்கு சாதகமாக இல்லாததால், தாங்கள் கடினமான நிலையில் இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். 

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தெற்கில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வடக்கே வேலூர், நடுவில் பெரம்பலூர், மேற்கில் கோவை, நீலகிரி ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

தி.மு.க-வின் ஆ.ராஜாவின் கோட்டையான நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சரும் முன்னாள் மாநில பா.ஜ.க தலைவருமான எல்.முருகன் குறி வைத்திருக்கிறார். புதுச்சேரி லோக்சபா தொகுதியையும் கூட்டணியின் ஒரு பகுதியாக பா.ஜ.க விரும்புவதாக கூறப்படுகிறது.

மறுபேச்சுவார்த்தையின் மற்றொரு இழப்பு அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளான அன்புமணி ராமதாஸின் பா.ம.க மற்றும் கேப்டன் விஜயகாந்தின் தே.மு.தி.க போன்றவையாக இருக்கலாம். அவற்றின் பங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஒரு காலத்தில் 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., இப்போது 3 தொகுதிகளை மட்டுமே பெறக்கூடும். தே.மு.தி.க-வின் நான்கு இடங்கள் 1-2 ஆக குறைக்கப்படலாம்” என்று அ.தி.மு.க தலைவர் ஒருவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Aiadmk Annamalai D Jayakumar Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment