அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலை வரலாறு தெரியாமல் கத்துக்குட்டி போல் பேசுகிறார். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
ஜெயலலிதா குறித்து அவர் பேசியது கண்டனத்துக்குரியது. இதற்கு முன்னர் தமிழகத்தில் பா.ஜ.க தலைவர்கள் இருந்த காலத்தில் தோழமை உணர்வு இருந்தது.
ஆனால் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார். அவரை அமித் ஷா- ஜெ. பி நட்டா கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர்.
பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல் முருகனுக்கு மாநில தலைவருக்கான தகுதி இருந்தது. ஆனால் அண்ணாமலைக்கு அது இல்லை. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை செயல்படுவது போல் உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “அண்ணாமலை இவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும்; இல்லை என்றால் வாங்கிக்கட்டி கொள்வார்” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“