Advertisment

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து: அரசு அறிவிப்பு

தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் 2020 என்ற சட்டத்தை தமிழ்நாடு ரத்து செய்தது. சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

author-image
WebDesk
New Update
Jayalaitha - finger print case - chennai highcourt
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற 2020-ல் சட்டம்  கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை ரத்து செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (பிப்.15) வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment

தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம், 2020, அ.தி.மு.கவின் முன்னாள் தலைவர், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் "வேத நிலையத்தை" நினைவிடமாக மாற்றுவதற்காக அறக்கட்டளையை நிறுவ சட்டம் இயற்றப்பட்டது.

நவம்பர் 24, 2021 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து, வீட்டின் சாவியை அவரது சட்டப்பூர்வ வாரிசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி, வழக்கில் மனுதாரராக இருந்த அவரது மருமகள் ஜெ.தீபாவிடம் டிசம்பர் 11, 2021 அன்று சாவி ஒப்படைக்கப்பட்டது. 

மசோதா குறித்து பேசிய மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்லத்தின் சாவி ரிட் மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இதனால், மேற்கூறிய சட்டம் எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டதோ அந்தச் சட்டம் வழக்கற்றுப் போனது. எனவே, அரசு சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது என்று கூறி மசோதாவை தாக்கல் செய்தார். இதன் பின் . சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment