Advertisment

ஞானபீட விருது தமிழுக்கு ஏன் இல்லை? வைரமுத்து கேள்வி

ஞானபீட விருது தமிழ்மொழியை தவிர்த்து வருவதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஞானபீட விருது தமிழ்மொழியை தவிர்த்து வருவதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் , “ சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது.  இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது.  முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள் வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஜெயகாந்தனுக்கு பிறகு 22 ஆண்டுகள் தமிழ் மொழிக்கு ஞானபீட விருது வழங்கப்படவில்லை என்றும் வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லை என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment