/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-22-at-11.07.08-1.jpeg)
திருச்சி எஸ் பி அதிரடி
திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலக தலைமை காவலர் காவலர்களுக்கு இரவு நேர ரோந்து பணி நியமனம் செய்யும் பொழுது பாரபட்சம் காட்டிய நிலையில் அந்தக் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் திருச்சி எஸ் பி வருண்குமார். இது குறித்த விபரம் வருமாறு;
திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பிலால் என்பவர் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவெறும்பூர் உட்கோட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு காவலர்களுக்கான பணியை நியமிக்கும் பணியினை செய்து வருகிறார்.
இந்தப் பணியின்போது காவலர்களுக்கு இடையே பாரபட்சமாகவும் ஒரு சிலருக்கு சாதகமாகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக திருச்சி எஸ்பி வருண்குமாரின் பொதுமக்கள் குறைதீர் அலைபேசிக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வருண்குமார் ரகசிய விசாரணை நடத்தினார். இதில் உண்மை தன்மை இருந்ததை அடுத்து அதிரடியாக தலைமைக் காவலர் பிலாலை திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார் எஸ் பி அருண் குமார்.
திருவெறும்பூர் டி எஸ் பி காவல் அலுவலகத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது திருவெறும்பூர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.