/tamil-ie/media/media_files/uploads/2022/12/Annamalai-4-1.jpg)
தமிழகம் வருகை தந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா புறப்பட்டு சென்றபின், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் வெற்றியை உறுதி செய்வோம் என்று புதன்கிழமை கூறினார்.
கோவைக்கு நேற்று வருகை புரிந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு இன்று கோவையில் இருந்து ஒடிசா புறப்பட்டார்.
அவரை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி தொண்டர்களுக்கு எழுச்சியையும் உத்வேகத்தையும் அளித்தது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த விழா அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அன்னூரில் கிளைத்தலைவர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தார் எனவும் இன்று ஒடிசா செல்வதாகவும்
தமிழ்நாட்டின் மீது சிறப்பு கவனம் பிரதமர் மோடி மற்றும் தேசியத் தலைவருக்கு உள்ளது எனவும்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தைக் கூட இங்கிருந்து தான் துவக்கி உள்ளதாக தெரிவித்த அவர் தேசிய தலைவர் எப்போது வந்தாலும் தொண்டர்களுக்கு உத்வேகமாக உள்ளது என்றார்.
செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.