இந்திய அரசியல் சாசனத்தின் 75 ஆண்டுகால பயணம் தொடர்பான சிறப்பு விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாநிலங்களவையில் உரையாற்றிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, “ காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசியல் சாசனம் பலமுறை அவமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பல இடங்களை சீனா கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“