/indian-express-tamil/media/media_files/3Hu7C8ldRnzKzY6r0Jtr.jpg)
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் சரவணன் என்பதற்கு பதிலாக குரங்கு என்ற அடைமொழியுடன் குரங்கு சரவணன் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை சூளைமேடு பகுதியில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழிப்பறி செய்த வழக்கில் 22 வயதான சரவணன் என்பவரை அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் சரவணன் என்பதற்கு பதிலாக குரங்கு என்ற அடைமொழியுடன் குரங்கு சரவணன் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த நீதிபதி, “ஒருவர் தன் பெயரை சொந்த விருப்பத்தின் பேரில் மாற்ற வேண்டும். குற்றவாளிகளுக்கு போலீசார் அடைமொழி பெயர்கள் சூட்டக் கூடாது” என்றார்.
தொடர்ந்து, குற்றப் பத்திரிகையில் இருந்து குரங்கு என்ற பெயரை நீக்க உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.