/indian-express-tamil/media/media_files/2025/01/13/61KBVLMpmU4cvmMJMOpA.jpg)
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எஃப்.ஐ.ஆர் வெளியிடப்பட வேண்டும்
சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறாமல் எஃப்.ஐ.ஆர் வெளியிடப்படுவதை உறுதி செய்யுமாறு பெருநகர சென்னை காவல்துறை ஆணையருக்கு (ஜி.சி.பி) கடிதம் எழுதியுள்ளார்.
"முதல் தகவல் அறிக்கைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றுவதில்லை என்பதை சென்னை பார் அசோசியேஷன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய சென்னை நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிபதி காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.