கோவை ஆவரம்பாளையம் அருகே தனியார் அரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் கோவை பார் அசோசியேசன் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைற்றது.
Advertisment
இதில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நீதிபதியை பாராட்டி பேசினர்.
பின்னர் மேடையில் பேசிய நீதிபதி விஸ்வநாதன் பேசியதாவது.நான் தமிழர் தான். தாய் மொழி தமிழ் தான். தமிழகத்தில் தான் படித்தேன். எந்த சந்தேகமும் வேண்டாம். எனவும் உச்ச நீதிமன்றம் நீதிபதி என்ற பதவியின் அடிப்படையில் இங்கு நான் பேச வரவில்லை.
நான் கோவையை சேர்ந்தவன் நான் கோவையை விட்டு சென்று இருக்கல்லாம். ஆனால் என்னுடைய மனதிலிருந்து கோவை விலகவில்லை என்றார்.
Advertisment
Advertisement
உச்ச நீதிமன்றம் நீதிபதி என்பதை பதவியாக காணவில்லை, ஒரு பொறுப்பாக கருதுகிறேன் எனவும் சிறு வயதிலிருந்தே வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஈர்ப்பு எனக்கு இருந்தது
என் தந்தைக்கு என்னைவிட கூடுதலாகவே விருப்பம் இருந்தது என்றார். பள்ளி பருவத்தில் பேன்சி ட்ரெஸ் போட்டியில் கூட வழக்கறிஞர் வேடம் போட்டுக்கொண்டு சென்று இருக்கிறேன். அப்போது எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதற்கு அப்போது ப்ளாஸ்டிக் கோப்பை கொடுத்தார்கள். பொள்ளாச்சி கமலா ஸ்டோரில் வாங்கியிருப்பார்கள் போல நகைச்சுவையாக தெரிவித்தார்.
கோவை வழக்கறிஞர் சங்கம் நான் நீதிபதியாக உதவியது. சட்டத்தின் மீதான ஆர்வம் , ஆரம்ப காலத்தில் இருந்தது. முதல் இரண்டு வருடங்கள் ஏற்படாவிட்டாலும், மெல்ல மெல்ல ஏற்படும் என்றார். கோவை குடிமகனாக இங்கு வந்து பேசி வருகிறேன். என் வாழ்க்கை பலதடவை விதி விளையாடியுள்ளது. அதில் விதியின் விளையாட்டு 1 பார்த்தீங்கண்ணா.
பந்தய சாலையில் வழக்கமாக சாரதாம்பாள் கோவிலுக்கு செல்வேன்! அதற்கு எதிரே உள்ள டெக்ஸ்டல் லைப்ரரி போவன், ஏசிக்காகவே நூலகத்திற்கு செல்வேன். அப்போது ஏசி புதிதாக வந்தகாலம். அங்கு நீதித்துறை குறித்த புத்தகங்கள் இருந்தது. அதை படிக்கும் பொது டெல்லி செல்லி வாதிடல்லாம் என்ற எண்ணங்கள் தோன்றியது என்றார்.
விதியின் விளையாட்டு 2 கையில் பணத்தையும் கொடுத்து டெல்லிக்கு வேலைக்கு அழைத்தார்கள். நானும் சென்றேன். இந்த காலத்து பசங்க ஆழ்ந்து படிக்க தெரிந்தவர்கள். அப்போது நாங்கள் அப்படி இல்லை. அப்போது அவசர புத்தி இருக்கும் என்றார்.
நான் தலைசிறந்த வழக்கறிஞர் கிடையாது. நம்பிக்கை இருந்தால் கடவுள் பாதி தூரம் வருவார். நமக்கான வாய்ப்பை வழங்குவார். அதை நான் நம்புகிறேன் என்றார். கோவையில் பல தலைசிறந்த, முக்கிய வழக்குகள் இருக்கின்றது.
எவிடன்ஸ் ஏக்ட் 27 ஆத்தப்பன் கவுண்டர் வழக்கில் தவறான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பான வழக்கு நடத்தப்பட்டுள்ளது.கோவை வழக்கறிஞர்கள் நாட்டில் எந்த வழக்கறிஞர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்றார். மேலும் கோவையில் அந்த காலத்திலே பெண் வழக்கறிஞர்களும் பணி செய்து வந்தார்கள். இப்போது பல பெண் வழக்கறிஞர்கள் உருவாகி வருகிறார்கள்.
65% முதல் 75% பெண் வழக்கறிஞர் இப்போது படித்து வருகிறார்கள். அந்த காலத்தில் பெண்களுக்கு கல்லூரியில் அனுமதி இல்லை, படித்தாலும் பட்டம் இல்லை. படித்தாலும் வழக்கறிஞர் என்ற அங்கீகாரத்தை கொடுக்க மறுத்த காலம் வரலாற்றில் உள்ளது என்றார்.
பெண்கள் முன்னுக்கு வரமால் செய்ய பல தடைகள் இருந்தது. பல இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் திறமை வீணாகிறது என்றார். இளம் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்கள் பணியில் எடுத்துக் கொள்ள சில திட்டங்களை அமல் செய்ய வேண்டும், அது என்னுடைய விருப்பம் என்றார்.
சட்டத்தை மட்டுமின்றி உடல் நலம் காப்பது, முதலீடு செய்வது குறித்து இளம் வழக்கறிஞர்களுக்கு கற்பிக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள். உங்கள் கொடுக்கப்படும் வழக்கில் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும். இந்த துறையில் கடுமையாக உழைப்பவர்களுக்கு எதிர்பாரத பரிசு நிச்சயம் கிடைக்கும் என இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“