/indian-express-tamil/media/media_files/RvBgfsjD1lxbBQUSmrmt.jpg)
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவ.7) விசாரணைக்கு வந்தன. அப்போது, ஏற்கெனவே இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியதால் தற்போது வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.