Advertisment

குட்கா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

குட்கா விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court

chennai high court

குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரி வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைப்பு.

Advertisment

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையிலும் வழக்குத் தொடரப்பட்டது.

இப்பிரச்சினை மற்றும் குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி (உயர்நீதிமன்றம்/ உச்சநீதிமன்றம்) தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் 25 ஆம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் குட்கா விற்பனையாளர் மாதவராவ்க்கு சொந்தமான குடோனில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் குறிப்புகள் சிக்கியுள்ளது. இந்த ஊழல் புகாரில் உயர் அதிகாரிகள் பலருக்கும் தொடர்புடையாதாள் வழக்கை தற்போது விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கூடாது. உயர் அதிகாரிகள் மீதான புகாரை ஏடிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்தால் உண்மை வெளிவராது எனவே சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணன், மனுதராரின் குற்றச்சாட்டுகள் மட்டும் தான். ஆனால் இதற்கான எந்த உரிய ஆதாரங்கள் இல்லை. குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. தற்போதைய விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு உள்ளது. விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் தொடர்புடையாதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை. ஆதாரம் இல்லாமல் தொடரபட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனை தொடர்த்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

பின்னர் நீதிபதிகள் வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமான வாதங்களை ஜனவரி 30 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, அன்பழகன் தரப்பு என அனைவரும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவையே எழுத்து பூர்வமான வாதங்களாக நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதனையடுத்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

வழக்கின் வாதங்களின் முழு விபரம் அறிய...

Chennai High Court Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment