Advertisment

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை 55 சென்னை புறநகர் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில் சேவைகளை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
chennai, chennai suburban train, maintenance works, southern railway, railway line upgradation, suburban train time changes, chennai train, chengalpattu, chennai beach

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1 மணி வரை மொத்தம் 55 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில் சேவைகளை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

தாம்பரம் பணி இடத்தை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1 மணி வரை மொத்தம் 55 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இரவு ரயில் சேவைகள் 10.20 மணிக்கு பிறகு, வழக்கமான நேரத்தில் நேர அட்டவணையின்படி ரயில் செயல்பாடுகள் இருக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மற்றும் திரும்பு திசையில் 31 ரயில்களும் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மற்றும் திரும்பும் திசையில் 11 ரயில்கள் ரத்து செய்யப்படும். மேலும், கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரி, திருமால்பூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. 

மேலும், சென்னை கோட்டம் கடற்கரையில் இருந்து பல்லாவரம் மற்றும் பல்லாவரம் கடற்கரைக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும். வழக்கமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நேரங்களில் மொத்தம் 30 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு 14 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கோட்டம், பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை பயணிகளுக்கு கடைசி ரயில் சேவை இணைப்பை வழங்குவதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க பெருநகர போக்குவரத்துக் கழகத்துடன் (எம்.டி.சி) ஏற்பாடு செய்துள்ளது. மேலும், செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment