/tamil-ie/media/media_files/uploads/2019/06/z896.jpg)
TamilNadu Rainfall Forecast: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் தொடங்கியது . இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தென்மேற்குப் பருவமழை இயல்பாக அல்லது இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சில மத்திய அரபிக் கடல் பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதிகள், வங்கக்கடலின் தென்கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பகுதி ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை சில நாட்களில் விரைவாகத் தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால், தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், சேலம், தருமபுரி , கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 -50 கிலோமீட்ட வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் இன்று தென் கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் வரும் ஜூன் 8ம் தேதி புதிய புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுவடைந்து ஒடிசாவில் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.