Advertisment

ரூ.200 கோடி லஞ்சம்; ஸ்டாலின் மீது புகார் கொடுப்பேன்: அண்ணாமலை பேட்டி

முதல்வரின் குடும்பத்தினர் வைத்துள்ள சொத்துக்களின் விவரங்கள் இந்த வீடியோவில் உள்ளது. திமுகவில் புதிதாக இணைந்தவர்கள், பினாமிகள் வைத்திருக்கும் சொத்து விவரங்கள் பார்ட்-2 வீடியோவில் விரைவில் வெளியாகும். இது பார்ட் -1 வீடியோ மட்டுமே என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
அண்ணாமலை

முதல்வரின் குடும்பத்தினர் வைத்துள்ள சொத்துக்களின் விவரங்கள்  இந்த வீடியோவில் உள்ளது. திமுகவில் புதிதாக இணைந்தவர்கள், பினாமிகள் வைத்திருக்கும் சொத்து விவரங்கள் பார்ட்-2 வீடியோவில் விரைவில் வெளியாகும். இது பார்ட் -1 வீடியோ மட்டுமே என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

Advertisment

திமுக தலைவர்களின் ஊழல் மற்றும் சொத்து விவரங்களை இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டார் அண்ணாமலை. இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : ”நான் பயன்படுத்தும், கார், அலுவலக ஊழியர்கள் மற்றும் எனது வீட்டு வாடகை ஆகியவற்றை நண்பர்கள்தான் கொடுக்கின்றனர். நான் கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் வைத்து திமுகவினர் பல வதந்திகளை பரப்பினர். நண்பரிடம் ரபேல் வாட்சை ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கினேன். அதற்கான பில்லை இப்போது உங்களுக்கு காட்டுகிறேன். கேரளாவில் உள்ள எனது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன்தான் எனக்கு இந்த வாட்சை கொடுத்தார்.  கோவை ஜிம்சன் நிறுவனத்தில்தான் அவர் இந்த வாட்சை வாங்கி உள்ளார். 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த வாட்சை வாங்கிய அவர் என்னிடம் மே மாதம் அதை கொடுத்தார். மேலும் சேரலாதன் ராமகிருஷ்ணனை எனக்கு 2 ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். இந்நிலையில் நான் இப்போது வெளியிடும் திமுக தலைவர்கள் தொடர்பான ஊழல் பட்டியலை பத்திரிக்கை நண்பர்கள் ஒரு வாரம் நான்றாக ஆராய வேண்டும். அதன் பின்பு ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம்.

publive-image

என்னை எப்போதும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களிடம் இன்று நான் கேள்வி கேட்ட உள்ளேன். நீங்கள் பொருமையாக கேட்க வேண்டும். முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் மாதத்திற்கு 7- 8 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இந்த வீடியோவில் முதல்வர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை  வெளியிட்டுள்ளோம். திமுகவில் புதிதாக சேர்ந்திருப்போரின் கருப்பு பணம் மற்றும் அவர்களது பினாமிகள் வைத்திருக்கும் 20 ஆயிரம் கோடி சொத்துக்களை பார்ட் -2 வீடியோவில் வெளியிட உள்ளேம். தமிழ்நாட்டுக்கு என்ன வேண்டுமோ அதை மோடியிடம் பேசி கொண்டு வரும் சாமர்த்தியம் எல். முருகனுக்கு இருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக  சிபிஐயிடம் நான் புகார் அளிக்க உள்ளேன். ” என்று அவர் கூறினார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment