/indian-express-tamil/media/media_files/FT7NUvezPVdud6df6Pyr.jpg)
Magalir Urimai Thogai
தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசு சேவைகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், மக்களுக்குத் தேவையான அரசு சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்க தமிழக அரசு தயாராகியுள்ளது. இது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், தங்கள் பகுதியிலேயே தேவையான சேவைகளைப் பெறும் வாய்ப்பை அளிக்கும்.
நகர்ப்புறங்களில் இதற்கென 3,768 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் 6,232 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் தன்னார்வலர்கள் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இத்திட்டத்தின் முதல் முகாம் வரும் ஜூலை 15ஆம் தேதி சிதம்பரம் நகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் வரை இம்முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு ஏற்பாடு:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுள்ள, ஆனால் விடுபட்ட பயனாளிகள், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவான தீர்வு: முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.