கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ1000: உங்கள் கோரிக்கை மனு விடுபட்டால் உடனே அப்பீல் பண்ணுங்க!

ஒருவேளை உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், விண்ணப்பதாரர்கள், இதுகுறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம்.

ஒருவேளை உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், விண்ணப்பதாரர்கள், இதுகுறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Kalaignar magalir urimai thogai scheme

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது.

Advertisment

காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.

முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.

Advertisment
Advertisements

பின்னர் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்தது.

தொடர்ந்து விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களை இறுதி செய்ய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தபட்ட மகளிரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ் செய்திகள் அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், விண்ணப்பதாரர்கள், இதுகுறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: