Advertisment

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன்? நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

author-image
WebDesk
New Update
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன்? நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் மரணமடைந்தார். இதுதொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளா் ரவிகுமார், செயலாளா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்துள்ளனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வருகின்றனா்.

5 பேரும் ஜாமீன் கோரிய தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ததற்கான காரணத்தை ஆக்ஸ்டு 26ம் தேதி தெரிவிக்காவிட்டாட்டால் விசாரணை    அதிகரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment