/indian-express-tamil/media/media_files/8gFjGwpn2pharbeCl7wN.jpg)
கள்ளக்குறிச்சி மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பியோடியவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவலால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளச்சாரயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி நேற்று தப்பியோடினார். அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
இதுவரை கள்ளச்சாரயம் குடித்து 55 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்துவிட்டு மருத்துவமனைக்கு வராமல் வீட்டில் இருந்த 55 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.