/indian-express-tamil/media/media_files/Kw13gOu4fyeOWuSHcbh7.jpeg)
kallakurichi illicit liquor death
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில், கருணாபுரம், ஏமப்பேர், வீரசோழபுரம், சிறுவங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை உயிரிழந்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த், புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன், மனைவி விஜயா ஆகியோரை கைது செய்தனர். கோவிந்தராஜிடம் இருந்து, 200 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் மெத்தனால் ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக எடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையிலான அதிகாரிகள், விசாரணை அதிகாரி கோமதி வியாழக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us