Advertisment

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் மரணம்

பேருந்து வேகத்தடையின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் ரவி கிரண் கொண்டு வந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்தது.

author-image
WebDesk
New Update
CISF jawan dies

Kalpakkam nuclear power plant

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் (37) பாதுகாப்புப் பணியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் ரவி கிரண் இரவு பணி முடிந்து சக வீரர்களுடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது பேருந்து வேகத்தடையின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் ரவி கிரண் கொண்டு வந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்தது.

இதனால் துப்பாக்கியில் இருந்த குண்டு ரவி கிரண் கழுத்தில் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து ரவி கிரண் உடல் பேருந்தில் கொண்டு வரப்பட்டு கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனை வளாகத்தில் வைத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chengalpattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment