அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள கமல்ஹாசன், வரும் 27ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். கட்சியின் பெயர், கொடி மற்றும் நிர்வாகிகள் விபரத்தை அன்றே அறிவிக்க உள்ளார்.
இதற்காக, கடந்த ஆண்டு இறுதியில் 'மய்யம்' என்ற பெயரில் மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கினார். தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் அந்த இணையதளம் இருக்கும் என கூறினார்.
இந்நிலையில், தற்போது மய்யம் என்ற பெயரில் இருந்த இணையதளம் நாளை நமதே என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே.
இணைவதற்க்கு
http://naalainamadhe.maiam.com/ என்று தனது" பதிவிட்டுள்ளார்.