'தமிழக அரசியலில் புது திசையில் நம்பிக்கையை உருவாக்கியவர் விஜயகாந்த்': கமல்ஹாசன் இரங்கல்

விஜயகாந்த் மறைவிற்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைவிற்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vijayakanth kamal.jpg
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நடிகரும், தே.மு.திக தலைவருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவால் இன்று (டிச.28) காலை உயிரிழந்தார். நுரையீரல் அலர்ஜி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Advertisment

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறுகையில், "எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. 

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

Advertisment
Advertisements

அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamalhaasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: