Advertisment

‘மதுக்கடைகளை மூடினால் சரியாகாது; மருந்து கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகம் ’ - கமல்ஹாசன்

“மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து. இங்கே மருந்துக் கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகம்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
kallakurichi kamal haasan

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,  “மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து. இங்கே மருந்துக் கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகம்” என்று கூறியுள்ளார்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அரசியல் கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதே போல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு, விஷச் சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு மாநிலம் முழுவதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தி.மு.க கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு வந்த கமல்ஹாசன், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளையும், இந்த சம்பவத்தில் ஒரே பகுதியில் ஒரே நாளில் தந்தை சுரேஷை இழந்த சிறுமி ரஷிதா, தந்தை பிரவீனை இழந்த ஜோஸ்வா, மோசஸ் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எந்த அரசாங்கங்கள் வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. அரசு கட்டுப்படுத்துவதை காட்டிலும் நாம்தான் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கல்விக்குத் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன்’ என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

“தமிழ்நாட்டில் ஒவ்வொரு மதுக்கடைகளுக்கு அருகிலும் அரசு சார்பில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் வகையில் ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகள் அருகிலேயே விழிப்புணர்வுப் பதாகைகளை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருந்துக்கடைகளுக்கு நிகராக டாஸ்மாக்குகள் இருக்கின்றன. இது போன்ற சம்பவங்களை அரசு மட்டும் கட்டுப்படுத்த முடியாது. குடிக்காதே என்று சொல்ல முடியாது. அளவோடு குடி என்று சொல்லாம். மதுவுக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், “மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து. அது சரியாகாது. சாலை விபத்து நடைபெறும் என்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. குறைவாக மது அருந்துங்கள் என்று அறிவுரை கூறும் இடங்கள் மதுக்கடை அருகிலேயே வேண்டும். மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் உள்ளன.” என்று கமல்ஹாசன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment