கோவையில் கமல் கலந்துக் கொண்ட கலந்துரையாடல் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கமலின் மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று கோவையில் அறிவிக்கப்படவிருக்கிறது.
இதனிடையே கோவை அல்லது ராமநாதபுரத்தில் கமல் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில், மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கமல் கலந்துக் கொண்டார்.
இதற்கு தேர்தல் பறக்கும் படையினர் ஆட்சேபனை தெரிவித்ததால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.