Advertisment

மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு; கமல்ஹாசன் அறிவிப்பு

2024 நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான ஒருங்கிணைப்புக் குழு; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
MNM election committe

2024 நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான ஒருங்கிணைப்புக் குழு; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளிநாடு செல்லவிருப்பதால், இன்று கட்சியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருடன் ‘2024 பாராளுமன்றத் தேர்தல்’ குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்பதற்கும் தலைவர் கமல்ஹாசன் ‘தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவினை’ உருவாக்கியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), R. தங்கவேலு, பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் M.A., B.L., ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ஆம் தேதி அன்றே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Makkal Needhi Maiam Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment