மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். இவர் தனது அதிகாரப்புர்வமான பாடலை இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மதியம் வெளியாகி, 3.37 நிமிடங்கள் நீடிக்கும் இந்தப் பாடலை வித்யாசாகர் இசையமைத்துள்ளார். கமல் ஹாசன் குரலில் வெளிவந்துள்ள இப்பாடலின் வரிகளையும் அவரே எழுதியுள்ளார்.
“நாளை நமதே, வேளை இனிதே” என்று துவங்கும் இந்தப் பாடல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்களை மய்யமாக கொண்உ உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியான 15 நிமிடத்திலேயே நூற்றுக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
தற்போது இந்தப் பாடல் உங்கள் பார்வைக்கு: