இந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கம்ல் சந்தித்து பேசினார். மேலும் இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல் கூறுகையில் ” இந்த தேர்தலில் நான் போட்டியிருவதாக இல்லை. தி.மு.க கூட்டணிக்கு எனது எல்லா ஒத்துழைப்பும் இருக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல நாட்டுக்கான விஷயம் எம்பதுதான் முக்கியம்.; இப்போது நாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் அறிக்கையில் என்னுடைய கையெழுத்தும், முதல்வரின் கையெழுத்தும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஒப்பந்தம் வாசிக்கப்பட்டது, “ 2023-2024 தேர்தலை பற்றி கலந்து பேசியதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதிமையம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வது எனவும் வருகின்ற மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“