/tamil-ie/media/media_files/uploads/2023/01/evs.jpg)
ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் உயிழிப்பை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகின்ற ஜனவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவின் எடப்பாடி அணிக்கு ஜிகேவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று பேட்டியளித்த பிரேம லதா தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். மேலும் தமிழக பாஜக எந்த நிலைப்பாடையும் இதுவரை எடுக்கவில்லை;
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு- செயற்குழு கூட்டம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசினார். “ காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதாரவை அள்ளிக்கிறோம். எனது நண்பரான இளங்கோவனை ஆதரிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு நேரம் இருப்பதால், இப்போது யாருடன் கூட்டணி என்பதை தெரிவிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.