Advertisment

'முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா' - கமல்ஹாசன்

மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால், அரசியல்வாதிகள் நியாயமானவர்களாக இருப்பார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா' - கமல்ஹாசன்

நான் முதல்வரானால் லோக் ஆயுக்தாவுக்குத்தான் முதல் கையெழுத்து போடுவேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடம் இன்று உரையாடலில் ஈடுபட்டார். அதில், ‘என்னை பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல விடாமல் பல தடைகள் வருகிறது. எங்கே, நான் உங்களிடம் பேசி உண்மையை புரிந்து கொள்ள வைத்து விடுவேனோ என்று சிலர் பயப்படுகின்றனர். நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களும் செய்யும் நேரம் வந்து விட்டது. போருக்கு செல்பவர்களுக்கு பதற்றமும் பயமும் இருக்காது. மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால், அரசியல்வாதிகள் நியாயமானவர்களாக இருப்பார்கள்.

மாணவர்கள் படித்து விட்டு வெளியே வரும் போது அரசியலும் ஊழலும் தாக்கும். மக்கள் நீதி மய்ய மேடைகளில் காலில் விழுவது, பொன்னாடைகள் போர்த்துவது இருக்காது. என்னைப்பற்றி அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதைப் பார்க்கும் போது பதற்றம் ஏற்படுகிறது. நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது. திராவிடம் என்பது நாடு தழுவியது. திராவிடத்தை ஒழிக்க முடியாது என்பது என்னுடைய கருத்து" என்றார்.

‘நீங்கள் முதல்வரானால் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?’ என்ற மாணவர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், “நான் முதல்வரானால் லோக் ஆயுக்தாவுக்குத்தான் முதல் கையெழுத்து போடுவேன்” என்றார்.

Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment