Advertisment

செம்பரம்பாக்கத்தில் கூடுதல் தண்ணீர் திறந்தாலும் சென்னைக்கு பாதிப்பு இல்லை: காஞ்சிபுரம் கலெக்டர்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 12000 கன அடி வரை உபரி நீர் வெளியேற்றினாலும் சென்னைக்கு பாதிப்பு இல்லை; காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேட்டி

author-image
WebDesk
New Update
Chembarambakkam lake

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 12000 கன அடி வரை உபரி நீர் வெளியேற்றினாலும் சென்னைக்கு பாதிப்பு இல்லை; காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேட்டி

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டாலும் சென்னைக்கு பாதிப்பு இல்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

இதனால் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர் மட்டம் 22.19 அடியாக உள்ளதுகொள்ளளவு 3169 மில்லியன் கன அடியாக உள்ளது.

கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சில நாட்களாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால், தற்போது 4079 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலை, கொள்ளளவு, நீர்வரத்து உள்ளிட்ட விவரங்களை, பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 12000 கன அடி வரை உபரி நீர் வெளியேற்றினாலும் சென்னைக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் அடையாறு ஆறு தூர் வாரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் கால்வாய் செல்லும் கிராமங்களான காவனூர், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்மேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Kanchipuram Chembarambakkam Lake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment