காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் முறைகேடு: அரசின் தலைமை ஸ்தபதிக்கு முன் ஜாமீன்!

முத்தையா ஸ்தபதிக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின்

முத்தையா ஸ்தபதிக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் முறைகேடு: அரசின் தலைமை ஸ்தபதிக்கு முன் ஜாமீன்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான உற்சவர் தங்க சிலை செய்வதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முத்தையா ஸ்தபதிக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவரான சோமஸ்கந்தர் சிலை செய்ததில் தங்கம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் , தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி முத்தையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த மாதம் முன் ஜாமீன் வழக்கு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு திருச்சியில் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி 10 நாட்கள் முத்தையா ஸ்தபதி ஆஜரானர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான விபரங்கள் சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment
Advertisements

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகாருக்கு எந்த விதமான ஆதாரங்கள் இல்லை. சிலை செய்ததில் மோசடி அல்லது தவறு எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் விசாரணைக்கு எங்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம். எங்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகும் உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன்.

முத்தையா ஸ்தபதிக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் வழங்குவதாக தெரிவித்தார். அவரின் பாஸ்போர்ட்டை விசாரனை நீதிமன்றமான காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.

வாரத்திற்கு 2 நாள் என 3 வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக

வேண்டும். அதன் பின்னர் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனைகள் விதித்தார். 10 ஆயிரம் ரூபாய் பினைத் தொகையும் அதே தொகைக்கு இரு நபர்கள் உத்திரவாதம் அளிக்க வேண்டும். விசாரணை காலத்தில் சாட்சிகளை கலைக்க கூடாது.

மேலும், முத்தையா மீது வேறு எதாவது வழக்கு பதியப்பட்டிருந்தால் அவரை கைது செய்யவோ அல்லது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு தடையில்லை என நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: