New Update
/indian-express-tamil/media/media_files/zQ9pujsVQ0zAYVY1cOjX.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் டாஸ்மாக் அருகே உள்ள தனியார் பாரின் சூப்பர்வைசர் அங்கு பணியாற்றும் ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் சூப்பர்வைசர் வினோத்தைக் கைது செய்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் டாஸ்மாக் அருகே உள்ள தனியார் பாரின் சூப்பர்வைசர் அங்கு பணியாற்றும் ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் டாஸ்மாக் அருகே உள்ள தனியார் பாரின் சூப்பர்வைசர் அங்கு பணியாற்றும் ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் சூப்பர்வைசர் வினோத்தைக் கைது செய்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலே தனியார் பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான பாரில் சூப்பர்வைசராக வினோத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பாரில் சப்பளையராக காணிக்கராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், மணிமங்கலம் பாரில் மது அருந்த வந்தவர்கள் சப்பளையர் காணிக்கராஜூ உடன் தகராறில் ஈடுபட்டுத் தாக்கியுள்ளனர். இந்த சண்டையில் பொடி மாஸ் சாப்பிட்டதற்கான பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். இது குறித்து வினோத் காணிக்கராஜிடம் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த வினோத் சப்பளையர் காணிக்கராஜை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் காணிக்கராஜ் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வினோத்தைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.