திடீர் ட்விஸ்ட் வைத்த தி.மு.க கவுன்சிலர்கள்... தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானம்; தப்பிய காஞ்சி மேயர் பதவி

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையிலா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில், 51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையிலா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில், 51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanchipuram Mayor Resolution failed DMK Councillors not attended Tamil News

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி 51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில், தி.மு.க. மேயர் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் போர்கொடி தூக்கினர். இது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்த நிலையில், தி.மு.க. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என.நேரு ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னரும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. 

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம், அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். தி.மு.க. மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி கூட்டம் நடைபெற இருந்த நிலையில், மேயருக்கு எதிரான நிலையில் உள்ள 35 கவுன்சிலர்கள் மற்றும் மேயர் தரப்பு கவுன்சிலர்கள் 10 பேர் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலா சென்றனர்.

தி.மு.க. மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் மேயருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே மேயரை பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால், இரு தரப்பு கவுன்சிலர்களும் சுற்றுலா சென்றதால், இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாத கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.

Advertisment
Advertisements

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில், கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இதன் மூலம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரின் பதவி தப்பியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kancheepuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: